மின்சார கட்டணம் தொடர்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு!

மின்சார கட்டணங்களை திருத்தம் செய்வது தொடர்பில் எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதி அறிவிக்கப்பட உள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மின்சாரக் கட்டணத்தில் திருத்தங்கள் செய்வது தொடர்பில் பொது மக்களிடம் எழுத்து மூலமாக கருத்துக்களை கோரும் நடவடிக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 8ம் திகதி வரையில் முன்னெடுக்கப்பட உள்ளதாக ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் ஒன்பதாம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பொது மக்களிடம் கருத்து கோரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து மின்சார கட்டணங்களை திருத்துவது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ள யோசனைகள் அண்மையில் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த முன்மொழிவுகளில் மின்சார கட்டணத்தை குறைக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதுடன் மின்சார கட்டணத்தை எவ்வளவு தொகையால் குறைப்பது என்பது குறித்து இன்னமும் அதிகாரப்பூர்வமான தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply