காலியில் பெண் அடித்துக் கொலை!

காலி மாவட்டத்திற்குட்பட்ட அலுத்வல பிரதேசத்தில் வீடொன்றினுள் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

76 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் கொலை செய்யப்பட்ட பெண் திருமணமாகாதவர் எனவும் அவர் பல வருடங்களாக தனது சகோதரனின் மகனுடன் வீட்டில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொசன் போயா தின நிகழ்விற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய பெண் படுகொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் கோனபினுவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply