மறைத்துவைக்கப்பட்ட போதைப்பொருட்களுடன் ஆறு சந்தேகநபர்கள் கைது!

இலங்கைக்கு மேற்கே சுமார் 121 கடல் மைல் தொலைவில் கடலில் உள்ள கப்பலொன்றை சோதனையிட்டதில், போதைப்பொருளுடன் 6 சந்தேகநபர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

கைப்பற்றப்பட்ட படகில் 200 கிலோகிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதோடு, அதில் ஐஸ் போதைப்பொருள் 120 கிலோகிராமும், ஹெரோயின் 80 கிலோகிராம் உள்ளடங்கியுள்ளன.

இதேவேளை, குறித்த போதைப்பொருட்களுடன் மீட்கப்பட்ட கப்பல் இன்று (26) காலை திக்கோவிட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிட்டதக்கது.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை
பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply