மாபெரும் இறுதிப் போட்டியில் மோதவுள்ள இரு அணிகள்!

2024 T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டி இன்று (29) நடைபெற உள்ளது.

இந்நிலையில், இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவுள்ள நிலையில், போட்டி பார்படோஸில் இலங்கை நேரப்படி இன்றிரவு 8:00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வென்ற உற்சாகத்தில் களமிறங்குகிறது. கடந்த 12 மாதங்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2023), 50 ஓவர் உலகக்கிண்ணத் தொடர் (2023), தற்போது ‘டி-20’ உலகக்கிண்ணத் தொடர் என மூன்று ‘உலக’ இறுதிப்போட்டிகளில் அணியை வழிநடத்தும் முதல் இந்திய அணித்தலைவர் என்ற பெருமை பெறுகிறார் ரோகித் சர்மா.

தென் ஆப்ரிக்காவும் அசைக்க முடியாத அணியாக திகழ்கிறது. ஐ.சி.சி., ‘நாக்-அவுட்’ போட்டிகளில் சொதப்புவதால், ‘சோக்கர்ஸ்’ என கேலி செய்தனர். இம்முறை அபாரமாக செயல்பட்டு, விமர்சனங்களை தகர்த்து இறுதிப் போட்டி வரை முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply