விதையை சாப்பிட்ட 8 மாணவர்கள் வைத்தியாசலையில்!

ஆமணக்கு விதையை சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக 8 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தட்சணாமருதமடு பகுதியில் குறித்த சம்பவம் நேற்று (28) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன் 9 வயதுடைய ஆண் குழந்தையொன்றும் 7 பெண் குழந்தைகளும் இதில் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் மடு பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் என்பதுடன் மடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply