அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு சாத்தியமில்லை!

சம்பள அதிகரிப்பு கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தற்போதைய பெறுமதி சேர் வரி வீதம் 18% இலிருந்து 20-21% ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கையின் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த கோரிக்கையை நிறைவேற்ற அரசு தயாராக இல்லை, இது பொதுமக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், இவ்வருட சம்பள அதிகரிப்பு சாத்தியமில்லை என வலியுறுத்தப்பட்டது.

எவ்வாறாயினும், 2025 வரவுசெலவுத் திட்டம், சம்பள ஏற்றத்தாழ்வுகள் குறித்த நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பொது சேவைகளின் சம்பளத்தை திருத்துவது குறித்து பரிசீலிக்கும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply