யாழ்ப்பாணத்தில் சூரியசக்தி மின்சாரம் வழங்கலில் முறைகேடு!

யாழ். மாவட்டத்தில் சூரியசக்தி மின்னிணைப்பு வழங்கலில் முறைகேடுகள் இடம்பெறுவதாக ஜனாதிபதி செயலகத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறிப்பிட்ட முறைப்பாடு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுமாறு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளரிடம் ஜனாதிபதி செயலகம் கோரியுள்ளது.

இதனைத்தொடர்ந்து யாழில் இயங்கும் பிராந்திய மின் இணைப்புப் பொறியிலாளரிடம் சூரியசக்தி இணைப்பு அனுமதிக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும் போது முறைகேடான விதத்தில் அனுமதிகள் வழங்கப்படுவதாகவும், மிக நீண்ட காலமாக விண்ணப்பங்கள் வேண்டுமென்றே கிடப்பில் போடப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் மின்சார சபையின் பொது முகாமையாளருக்கு முறைப்பாடு செய்த வாடிக்கையாளர் ஒருவர் பழிவாங்கப்படுவதாகவும் ஜனாதிபதியின் குறைகேள் அதிகாரிக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்தே ஜனாதிபதியின் செயலாளரினால் குறித்த விடயம் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை மேற்கொண்டு, அறிக்கையிடுமாறு ஜனாதிபதியின் செயலாளரினால் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளரிடம் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply