அரசியல் களத்தில் மோத தயாராகும் வைத்தியர் அர்ச்சுனா!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற பல்வேறு மோசடிகளை வைத்தியர் அர்ச்சுனா ராமநாதன் அம்பலப்படுத்தியிருந்தார்.

திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைய வைத்தியர் அர்ச்சுனா களமிறங்கப்பட்டதாக சில தரப்பினரால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் வைத்தியரால் அம்பலப்படுத்தப்பட்ட மோசடிகள், அரசியல்வாதிகளின் ஆதரவுடன் செயற்படும் வைத்திய மாபியா கும்பல்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இதன் விளைவாக கடந்த சில வாரமாக இது குறித்து பல்வேறு வாத விவாதங்கள் ஏற்பட்டாலும், தற்போது மக்கள் போராட்டம் முழுமையாக தோல்வி அடைந்த ஒன்றாகவே மாறியுள்ளது.

இதற்கு வட மாகாண அரசியல்வாதிகளே காரணம் என உண்மைகளை அம்பலப்படுத்திய வைத்தியர் அர்ச்சுனா ராமநாதன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியாலைக்கு இன்று சுகாதார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினை முற்றுமுழுதாக மூடி மறைக்கப்பட்டுள்ளதுடன் அவ்வாறாதொரு பிரச்சனை அங்கில்லை என சில தமிழ் அரசியல்வாதிகளால், சுகாதார அமைச்சரிடம் தெரிவித்ததாக வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் தேர்தலின் போது தான் நேரடியாக அரசியலில் ஈடுபடாத போதும், மக்களின் ஆதரவுடன் ஒருவரை நிறுத்துவதன் ஊடாக இவ்வாறான அரசியல்வாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply