வாக்களிக்க வந்திருந்தவருக்கு குளவி கொட்டு

வெலிமட- குருத்தலாவ புனித தாமஸ் கல்லூரியிலுள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க வந்திருந்த ஒருவர், குளவி கொட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளனர்.

இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் குருத்தலாவ பகுதியைச் சேர்ந்த 53 வயதான ஒருவரே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த நபர் வாக்களித்துவிட்டு, வீடு திரும்பிச் செல்லும்போதே குளவி கொட்டுக்கு இலக்காகியதாக போகாஹகும்புரா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir