வைத்தியசாலை பணிகளில் இடையூறு!

நாட்டில் 702 விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கையில் மயக்க மருந்து நிபுணர்கள் மற்றும் சத்திரசிகிச்சை நிபுணர்கள் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து , நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியர்களுக்கு பதிலாக சிரேஷ்ட நிபுணர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டிலிருந்து வெளியேறிய விசேட வைத்தியர்களின் வெற்றிடம் காரணமாக பல வைத்தியசாலைகளின் பணிகளில் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply