இலங்கை அணியில் மொகமட் சிராஸ்

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ரி-20 போட்டியில் களத்தடுப்பின்போது, இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மதீஷ பத்திரன தோள்பட்டையில் காயமடைந்திருந்தார்.

இதன் காரணமாக இலங்கை ஒருநாள் தொடருக்கான அணியில், கண்டியைச் சேர்ந்த 29 வயது வலதுகை வேகப்பந்துவீச்சாளரான மொகமட் சிராஸ் இணைக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு இன்றையதினம் ஆரம்பமாகியுள்ள முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக அவர் இலங்கை அணிக்கான தனது சர்வதேச கிரிக்கெட் அறிமுகத்தை மேற்கொள்கிறார்.

நடந்து முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

இந்த மூன்று போட்டிகளிலும் துடுப்பாட்டத்தில் மிக நல்ல நிலையில் இருந்தபோதிலும், இறுதி ஓவர்களில் மிக மோசமாக விளையாடிய இலங்கை அணி, தோல்வி அடைந்து தொடரை இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: digital

Leave a Reply