கொழும்பு வந்தடைந்த இந்திய நீர்மூழ்கி கப்பல்!

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘ஐ என் ஸ் ஸகி’ நீர்மூழ்கி கப்பல் உத்தியோகபூர்வ விஜயமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்நிலையில் குறித்த நீர்மூழ்கி கப்பல் செயற்பாட்டு பணிகள் தொடர்பில் இலங்கை கடற்படையினரை தெளிவுபடுத்தும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதேவேளை 64.4 மீற்றர் நீளம் கொண்ட ‘ஐ என் ஸ் ஸகி’ கப்பலின் கட்டளையிடும் அதிகாரியான கமான்டர் ராகுல் பட்நாயக் மற்றும் மேற்கு கடற்படை முகாமின் கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க ஆகியோருக்கிடையில் நேற்றைய தினம் சந்திப்பொன்றும் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து நாளை கப்பல் மீள இந்தியா நோக்கி திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply