யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் விபத்து!

யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் முந்திச் செல்ல முயன்ற ஹயஸ் வாகனத்தால் மூன்று வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்து இன்று காலை 7.45 மணியளவில் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இடம்பெற்றது.

இந்நிலையில் சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்ட பேருந்து, ஹயஸ் வாகனம், டிப்பர் என்பன பயணித்துள்ள நிலையில் ஹயஸ் வாகன சாரதி பேருந்தை முந்திச் செல்ல முற்பட்டபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்து காரணமாக ஹயஸ் வாகனம் பலத்த சேதமடைந்ததுடன் , பேருந்தின் பின்பகுதி, டிப்பரின் முன்பகுதி என்பன சிறியளவில் சேதமடைந்துள்ளது.

விபத்தின் போது ஒருவருக்கும் உயிர் சேதம் ஏற்படாத நிலையில்
ஹயஸ் வாகனத்தின் சாரதி காயமடைந்தார்.

சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply