கட்டுப்பணம் செலுத்தினார் நாமல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்காக கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்ஷ சார்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இன்று காலை தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட 40 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று நண்பகல் 12 மணியுடன் கட்டுப்பணம் செலுத்தும் கால அவகாசம்  நிறைவடைந்துள்ளது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: digital

Leave a Reply