இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை

கேகாலை நகரத்திலுள்ள கடையொன்றில் ஏற்பட்ட மோதல் சம்பத்தில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கேகாலையைச் சேர்ந்த 24 வயதுடையவரே உயிரிழந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவர்களை கண்டறியும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கேகாலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir