ஜனாதிபதி தேர்தலையொட்டி அமுலுக்கு வருமா ஊரடங்குச்சட்டம்?

அடுத்த வாரம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான எந்தத் திட்டமும் அல்லது தயாரிப்புகளும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் இதனை தெரிவித்துள்ளார்.

இதுவரை ஊரடங்கு உத்தரவை ஏற்பாடு செய்வதற்கான திட்டங்கள் மற்றும் தயாரிப்புகள் எதுவும் இல்லை
இருப்பினும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரம் நிறைவேற்று ஜனாதிபதிக்கு இருப்பதாகவும், “ஜனாதிபதி விரும்பினால், ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படலாம்,” என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரம் நிறைவேற்று ஜனாதிபதிக்கும் பொலிஸாருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு காலப்பகுதியில் மக்கள் போராட்டத்தை கட்டுப்படுத்த ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

இதேவேளை, இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்க உட்பட 38 வேட்பாளர்கள் இதில் போட்டியிடுகின்றனர்.

நாட்டில் 17.1 மில்லியன் மக்கள் எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும் அவர்களில் ஒரு மில்லியன் பேர் முதல் முறை வாக்காளர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply