ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் அமைப்பாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்டத்தில் ஹினிதும தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளராக கடமையாற்றிய நபர் ஒருவர் ஹோமாகம, பனாகொடவில் உள்ள அவரது வீட்டில் வைத்து தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பலியானவர் இன்று (17) பனாகொட, சமகி மாவத்தையில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது, ​​முச்சக்கரவண்டியில் வந்த நபரொருவர் அவரது தலையில் பொல்லினால் தாக்கியுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர். பலத்த காயங்களுடன் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஹோமாகம பனாகொட பிரதேசத்தைச் சேர்ந்த சம்பத் கமகே என்ற வர்த்தகர் என்பதுடன் கொலையை செய்த சந்தேக நபர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

உயிரிழந்தவர் ஹினிதும தொகுதிக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளராக கடமையாற்றியவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நுகேகொடை பொலிஸ் பிரிவின் குற்றப்பிரிவு அதிகாரிகள்  மற்றும் மீகொட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply