கிளப் வசந்த கொலைவழக்கின் மேலும் ஒரு சந்தேகநபர் கைது!

அதுருகிரியவில் ‘கிளப் வசந்த’ எனப்படும் வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா உள்ளிட்ட இருவர் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அளுத்கம, தர்கா நகரில் வசிக்கும் 24 வயதுடைய சந்தேகநபர் மேல் மாகாண (தெற்கு) குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (17) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபரை   48 மணிநேர தடுப்புக் காவலில் தடுத்து வைத்து விசாரணை நடத்துமாறு கடுவெல பதில் நீதவான், டி.ஜி.பி. கருணாரதன உத்தரவு பிறப்பித்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட தோட்டாக்களில் KPI என்று எழுதியமை மற்றும் சந்தேகநபர்களை அத்துரிகிரிய கல்பொத்த பகுதிக்கு அழைத்துச்சென்றமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஒரு பெண் உட்பட 12 சந்தேகநபர்கள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் நான்கு பேர் மூன்று மாத காலத்திற்கு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply