முல்லைத்தீவில் ஜனாதிபதித் தேர்தல் அமைதியான முறையில்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தல்
அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றது.

இலங்கையின் 9ஆவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் காலை 7 மணியிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் சீரான முறையில் நடைபெற்று வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 86,889 பேர் இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இன்று அங்கு, 137 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புக்கள் அமைதியாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ந.கலைச்செல்வன்
முல்லைத்தீவு

You May Also Like

About the Author: digital

Leave a Reply