யாழ்ப்பாணத்தில் வாக்குச் சீட்டைக் கிழித்த இளைஞர்!

யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாசாலையில் வாக்களிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் வாக்குச் சீட்டைக் கிழித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று இடம்பெற்றுவரும் நிலையில், வாக்கெடுப்பு உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்ட வாக்குச் சீட்டையே குறித்த இளைஞர் இரண்டாகக் கிழித்துள்ளார்.

குறித்த இளைஞரிடம் யாழ்ப்பாணம் தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்கள் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்புரைக்கமைய அடுத்த கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இளைஞர் தேர்தலில் வாக்களிப்பது இதுவே முதல் தடவை எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

You May Also Like

About the Author: digital

Leave a Reply