ஊரடங்குச்சட்டம் நண்பகல்வரை நீடிக்கப்பட்டது!

நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இலங்கையில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் நண்பகல் 12 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் பயணிப்பதற்கு பொலிஸ் நிலையங்களினால் ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் மற்றும் அவசர சேவைகளுக்காக பயணிக்கும் போது உங்களின் உத்தியோகபூர்வ அடையாள அட்டையை ஊரடங்கு உத்தரவு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியும் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: digital

Leave a Reply