விருப்பு வாக்கு எண்ணும் பணி ஆரம்பம்!

2024 ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்கு அமைய எந்த ஒரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெறவில்லை, என தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கமைய, இரண்டாவது விருப்பு வாக்கு எண்ணிக்கையின் ஊடாக புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, முன்னணி வகிக்கும் இரண்டு வேட்பாளர்களைத் தவிர ஏனைய அனைத்து வேட்பாளர்களும் போட்டியில் இருந்து நீக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

எனவே, போட்டியில் இருந்து நீக்கப்படும் வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இரண்டாவது விருப்பு வாக்குகளுக்கு அமைய புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதித் தேர்தல் ஒன்றில் இரண்டாவது விருப்பு வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: digital

Leave a Reply