அண்மையில் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்கள் வெளியாவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமையை கருத்திற் கொண்டு கல்வி, விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சு எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் கல்வி அமைச்சுக்கு முன்பாக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் புலமைப்பரிசில் பரீட்சை வினாக்களின் முதற்பகுதியின் மூன்று வினாக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு நேற்று மூன்று வினாக்கள் தொடர்பான அனைத்து மாணவர்களுக்கும் முழு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் என அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
