இருளில் மூழ்கிய கியூபா!

கியூபாவில் நாடு தழுவிய அளவில் ஏற்பட்டுவரும் மின்வெட்டுகளை கண்டித்து, வீதிகளில் குப்பைகளைக் கொட்டி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்நாட்டின் மிகப்பெரிய மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுதால் கடந்த வெள்ளிக்கிழமை நாடு தழுவிய அளவில் மின் வெட்டு ஏற்பட்டது.

இந்நிலையில் மின் விநியோகம் சீரான அடுத்த 24 மணி நேரத்தில், மீண்டும் மின் உற்பத்தி நிலையத்தில் பழுது ஏற்பட்டு, முழு தீவும் இருளில் மூழ்கியதால் மக்கள் ஆங்காங்கே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுதும் செயற்பட்டு வந்த மின் உற்பத்தி நிலையங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்தியதை அடுத்து,நாடு முழுதும் மின்சாரம் தடைப்பட்டது.

இதனால் அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply