வெலிக்கடை சிறைசுவரில் 15 அடி உயர வேலி

வெலிகட சிறைச்சாலையின் சுவருக்கு மேல் 15 அடி உயரத்தில் புதிய தடுப்பு வேலி அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக சிறை ஆணையாளர் சந்தன ஏகநாயக்க குறிப்பிடுகையில், “வெலிகட சிறைச்சாலையின் பெண்கள் பிரிபில் சட்டவிரோத மருந்துகள் மற்றும் போதைப்பொருள் உள்ளிட்டவைகள் தொடர்ந்து மீட்கப்படுகின்றது.

எனவே குறித்த குற்றச்செயற்பாடுகளை தடுக்கவே வெலிகட சிறைச்சாலையின் சுவருக்கு மேல் புதிய 15 அடி உயர பாதுகாப்பு வேலி அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir