இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!
இந்த ஆண்டு நாட்டிற்கு சுமார் 1.9 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
டிசம்பர் மாதத்தில் மாத்திரம் 90,000 இற்கும் அதிகமானோர் வருகை தந்துள்ளதாக அதன் தலைவர் புத்திக ஹேவாவசம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 2.2 மில்லியன் என்ற இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அந்த இலக்கை எட்டிய பின்னர், 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு 2 மில்லியன் இலக்கை எட்டுவது இதுவே முதல் முறையாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.
