ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவுக்கு இந்தியாவில் வரவேற்பு நிகழ்வு!

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை உத்தியோகபூர்வமாக வரவேற்கும் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.

இந்நிகழ்வு தற்போது இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்டிரபதிபவனில் ஆரம்பமாகியுள்ளது.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு, ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையிலான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான ஹைதராபாத் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன் அங்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், இருதரப்பு கலந்துரையாடல்கள் மற்றும் கூட்டு ஊடக அறிக்கை வெளியீடும் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply