நத்தார் பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு மற்றும் விசேட அனுமதி!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கத்தோலிக்க தேவாலயங்களின் பாதுகாப்பிற்காக 45,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் மிகவும் அத்தியாவசியமான இடங்களுக்கு இராணுவ பாதுகாப்பை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நத்தார் பண்டிகையை முன்னிட்டு கைதிகளை பார்வையிடவும் விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது, சிறைச்சாலைக்குள் சென்று நேரடியாக கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், நத்தார் பண்டிகையை முன்னிட்டு 398 சிறைக்கைதிகளுக்கு விசேட அரச பொது மன்னிப்பு வழங்கபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply