விபத்தில் 22 வயது இளைஞர் பலி- வவுனியாவில் சம்பவம்!

வவுனியா கோவில்குளம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

நேற்று (25) இரவு குறித்த இளைஞர் மற்றொரு இளைஞருடன் மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்த வேளையில், வவுனியா கோவில்குளம் பகுதியில் மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் கரையில் இருந்த மின்சாரகம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது.

விபத்தில் மோட்டார்சைக்கிளை ஓட்டிச்சென்ற இளைஞர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளார், மற்றயவர் காயமடைந்துள்ளார்.

சம்பவத்தில் யாழ் அராலிபகுதியை சேர்ந்த ப.சஞ்சயன் என்ற 22 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply