முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தற்கொலைக்கு முயன்றதாக பேஸ்புக் உள்ளிட்ட பல சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும், இந்தச் செய்தி முற்றிலும் போலியானது என அவருக்கு நெருக்கமானவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பிரசன்ன ரணதுங்க இந்த நாட்களில் தனது குடும்ப உறுப்பினர்களுடன் வெளிநாட்டில் சுற்றுலாவில் இருப்பதாகவும், அடுத்த சில நாட்களில் அவர் நாடு திரும்புவார் எனவும் தெரிவித்துள்ளனர்.
