பிரதமர் மஹிந்த உத்தியோகபூர்வமாக கடமைகளை ஆரம்பிக்கவுள்ளார்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று தனது கடமைகளை அலரிமாளிகையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கவுளள்ளார்.

நாட்டின் 28ஆவது பிரதமராக இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

களனி ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சர்வதேச நாடுகளின் ராஜதந்திரிகள் மற்றும் ஏனைய முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிறைவடைந்த பொதுத்தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ, 5 இலட்சத்து 27 ஆயிரத்து 364 விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார்.

இலங்கை வரலாற்றில் வேட்பாளர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிக விருப்பு வாக்குகளாக இது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir