யாழில் ஹெரோயினுடன் இளைஞன் கைது!

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

வண்ணார்பண்ணையைச் சேர்ந்த 27 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து 60 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

யாழில் நீண்டகாலத்தின் பின் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை ஹெரோயினாக இது கருதப்படுகிறது.

சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply