ரணில் விலகவுமில்லை – கட்சியின் செயற்குழு கூடவுமில்லை

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைபதவி தொடர்பில் கட்சியின் உயர்மட்டத்துடன் தலைவர் ரணில்விக்கிரமசிங்க எந்த உடன்பாட்டிற்கும் வரவில்லை என ஐக்கியதேசிய கட்சி வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு கசட் செய்தி வெளியிட்டுள்ளது.

ரணில்விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் இதனை தெரிவித்துள்ளன.

நேற்று ஐக்கியதேசிய கட்சியின் செயற்குழு கூடவில்லை எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐக்கியதேசிய கட்சியின் சில சிரேஸ்ட தலைவர்கள் ஒன்றுகூடி ரணில்விக்கிரமசிங்க தலைவர் பதவியிலிருந்து விலக தீர்மானித்துவிட்டார் என அறிவிக்க தீர்மானித்தனர் என ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ரவிகருணாநாயக்க, தயாகமகே,வஜிரஅபயவர்த்தன அகிலவிராஜ்காரியவசம் ஆகியோர் தங்களை கட்சி தலைவர் பதவிக்கு பிரேரரிப்பதற்கு தீர்மானித்துள்ளனர் அவர்கள் நாளை ரணில்விக்கிரமசிங்கவை சந்தித்து இது குறித்த யோசனையை முன்வைக்கவுள்ளனர் எனவும் ரணில்விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வெள்ளிக்கிழமை ஐக்கியதேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்திலேயே இது குறித்த முடிவெடுக்கப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

You May Also Like

About the Author: kalaikkathir