இலங்கையின் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் ராட்சத ‘பட்ட திருவிழா’ நடைபெறுவது வழக்கம்.
வல்வையின் பட்டம் கட்டும் கலை அழிந்து விடக் கூடாது என்றும், அதனை வித்தியாசமாக கண்ணோட்டத்தில் வளர்க்க வேண்டும் என்றும் இன்றைய நிலையில் விக்னேஷ்வரா சனசமூக சேவா நிலையமும், உதயசூரியன் விளையாட்டுக் கழகமும் இணைந்து உதய சூரியன் உல்லாசக் கடற்கரையில் இப்பட்டத திருவிழாவினை நடாத்தி வருகின்றார்கள்.
ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெற்று வரும் வல்வை சர்வதேச விநோத பட்டத் திருவிழா, தைப்பொங்கல் தினமான நேற்று (14) மிகவும் கோலாகலமாக வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடைபெற்றது.
வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையம் மற்றும் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், சிறப்பு விருந்தினராக வடமராட்சி வடக்கு (பருத்தித்துறை) பிரதேச செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன், கௌரவ விருந்தினராக வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற செயலாளர் சத்தியநாதன் கிசோக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது விநோதமான பட்டங்கள் பறக்கவிடப்பட்டன.

