மன்னார் நீதிமன்றின் முன்பு துப்பாக்கிச் சூடு!

மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக இன்றைய தினம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மன்னார் நீதிமன்றத்தில் இன்றைய தினம் (16) இடம்பெறவிருந்த வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றத்திற்கு வருகை தந்தவர்களை இலக்கு வைத்து, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு சம்பவதின் போது, மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் படுகாயமடைந்த இரு ஆண்கள் உயிரிழந்ததுடன், மற்றைய ஆணொருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர்கள் மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 61 வயதான சவேரியன் அருள் வயது மற்றும் 42 வயதான செல்வக்குமார் யூட்வயது என தெரிய வந்துள்ளது.

மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற இரட்டை படுகொலையை தொடர்ந்து நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் சம்பவங்கள் இடம் பெற்று வந்த நிலையில் இவர்கள் மீதும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply