ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை!

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவை பிணையில் விடுவிக்க நுகேகொட நீதவான் இன்று (17) உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, உதயங்க வீரதுங்க 10,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அயல் வீட்டு நபரை தாக்கிய சம்பவம் தொடர்பாக மிரிஹான பொலிஸாரால் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து அவர் கடந்த 10ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply