தாயையும் மகளையும் பலியெடுத்த கோர விபத்து

தொம்பே, மல்வான பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணும் அவருடைய மகளும் தொம்பே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

42 வயதுடைய தாயும் அவருடைய 19 வயதுடைய மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir