குஷ் போதைப்பொருளுடன் விமானம் மூலம் இலங்கை வந்த குற்றச்சாட்டில் கட்டுநாயக்கவில் வைத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி பேங்கொக்கில் இருந்து 2 கிலோ கிராம் குஷ் போதைப்பொருளுடன் இலங்கைக்கு வந்த சந்தேகநபரும், அவருக்கு உதவிய மற்றுமொரு சந்தேகநபருமே கட்டுநாயக்கவில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவினரால் நேற்று (31) கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 31 மற்றும் 36 வயதுடைய ஹங்வெல்ல மற்றும் உடுகம்பல பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை விமான நிலைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு முன்னெடுத்துள்ளது.