அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா பகுதியில் இடம்பெற்ற விமான விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிலடெல்பியா நகர விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட மருத்துவ சேவைப் பிரிவுக்கு பயன்படுத்தப்படும் சிறிய ரக விமானம் ஒன்று, புறப்பட்ட 30 நொடிகளில் விபத்துக்குள்ளாகி குடியிருப்பு பகுதியில் விழுந்ததில் வீடு மற்றும் பல கார்கள் தீப்பிடித்து எரிந்ததாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விமானத்தில் பயணித்த 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஏர் எம்புலன்ஸ் நிறுவனமான ஜெட் ரெஸ்க்யூ ஏர் எம்புலன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான்கு பணியாளர்கள், ஒரு குழந்தை மருத்துவ நோயாளி மற்றும் நோயாளியின் உறவினர் உடன் விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.