தனிப்பட்ட பாதுகாப்பிற்காக அனுமதிப்பத்திரத்துடன் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மறுபரிசீலனை செய்து மீண்டும் வழங்கப்படுவதின் கீழ் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தது.
இந்த உத்தரவுக்கு அமைய யோஷித ராஜபக்ஷவிடம் இருந்த 7 துப்பாக்கிகளில் 5 துப்பாக்கிகள் முன்னரே ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில், அவரிடம் எஞ்சி இருந்த இரண்டு துப்பாக்கிகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.