![](https://onlinekathir.com/wp-content/uploads/2025/02/1730942137-aswesuma-2-796x445.jpg)
அஸ்வெசும கொடுப்பனவு பெறும் பயனாளர்களுக்கு, இந்த மாதத்திற்கான கொடுப்பனவு இன்று (13) பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி இதற்காக 12.5 பில்லியன் ரூபாவுக்கும் அதிக பணம் ஒதுக்கப்பட்டு, 17,25,795 குடும்பங்களுக்கான கொடுப்பனவு இன்று அவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
மேலும் சம்பந்தப்பட்ட பயனாளிகள் தங்களுக்கான தொகையை வங்கிக் கணக்கிலிருந்து பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.