கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து பாணந்துறையில் விபத்துக்குள்ளாகியது!

லுணுகம்வெஹெரவிலிருந்து- கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து பாணந்துறை மேம்பாலத்திற்கு அருகில் கவிழ்ந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்து இன்று (15) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றிருந்தது.

குறித்த விபத்து இடம்பெற்றதில் நான்கு பேர் காயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த நேரத்தில் பஸ்ஸில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேருந்தின் சக்கரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பஸ்ஸின் சாரதி பாணந்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply