புதிய அரசின் கொள்கை வரும் வியாழக்கிழமை அறிவிக்கப்படும்

புதிய அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையினை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி கோட்டதபய ராஜபக்ஷ அறிவிக்க உள்ளார்.

புதிய அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையினை எதிர்வரும் வியாழக்கிழமை 9 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்க உள்ளார்.

தொடக்கக் கூட்டத் தொடருக்கு பிற்பகல் 3.00 மணிக்கு ஜனாதிபதி தலைமை தாங்குவார். மேலும் அரசியல் அமைப்பின் 33 (2) வது பிரிவில் வழங்கப்பட்டுள்ளபடி புதிய அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை முன்வைப்பார்.

இதேவேளையில், புதிய நாடாளுமன்றம் அதே நாளில் காலை 9.30 மணிக்கு கூடும். அதன் பின்னர் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். உறுப்பினர்கள் பதவி ஏற்பார்கள். பின்னர் துணை சபாநாயகர் மற்றும் குழுக்களின் துணைத் தலைவர் நியமிக்கப்படுவார்கள். பின்னர் சபாநாயகர் பிற்பகல் 3.00 மணி வரை நாடாளுமன்றத்தை ஒத்தி வைப்பார்.

You May Also Like

About the Author: kalaikkathir