
குஷ் ரக போதைப்பொருளுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (26) அதிகாலை பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 38 வயதுடைய இந்தியப் பெண் என தெரியவந்துள்ளது.
குறித்த பெண் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
தாய்லாந்திலிருந்து ஹொங்கொங் வழியாக இலங்கைக்குள் பிரவேசித்த குறித்த பெண் 12 மில்லியன் மதிப்புள்ள 1 கிலோ 200 கிராம் குஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். குஷ் போதைப்பொருளை தனது பயணப்பையில் உணவு பொதியொன்றில் மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளார்.
இதன்போது, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும், மீட்கப்பட்ட போதைப்பொருளும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.