
உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி மார்ச் 17 முதல் 20ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், இது குறித்த வர்த்தமானி அறிவிப்பு தற்போது அச்சிடுவதற்காக அனுப்பப்பட்டுள்ளதாக கூடுதல் தேர்தல் ஆணையர் எம்.எம்.எஸ்.கே. பண்டார மாபா தெரிவித்தார்.
அத்துடன் உள்ளூராட்சி தேர்தல் மே மாதம் முதல் வாரத்தில் நடாத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் ஆணையத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போது, உள்ளூராட்சி தேர்தலை நடாத்துவதற்கான திகதி குறித்து இந்த வாரத்திற்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அந்தந்த அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்படும் அனைத்து திட்டங்களையும் பரிசீலித்த பிறகு முடிவு எடுக்கப்படும்.
நாங்கள் அனைத்து பரிந்துரைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறோம். இருப்பினும் ஒரு சுயாதீன அமைப்பாக உள்ளூராட்சித் தேர்தல் சட்டத்திற்கு ஏற்ப, தொடர்புடைய திகதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.