
இன்று (05) காலை மலேசியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இரண்டு நபர்கள் 1.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான உடலைப் பொலிவூட்ட பயன்படுத்தப்படும் விட்டமின்கள் அடங்கிய 179 டின் பால்மாவை நாட்டிற்கு கொண்டு வந்த நிலையில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் நீர்கொழும்பை சேர்ந்தவர் என்றும், மற்றையவர் கொழும்பு, கொட்டாஞ்சேனையை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
மனித நுகர்வுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்பதற்காக தேசிய ஓளடதங்கள் அதிகாரசபையின் அனுமதி இல்லாமல் இந்த பால்மா தொகை நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் சந்தேகநபர்கள் இருவரையும் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.