பட்டதாரி பெண் ஹஷீஷ் போதைப்பொருளுடன் கைது!

ஹஷீஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் சுங்க அதிகாரிகளால் நேற்று (09) இரவு கைது செய்யப்பட்டார்.

கைதி செய்யப்பட்ட குறித்த பெண் 20 வயதுடைய கனேடிய இளங்கலை பட்டம் பெறவிருக்கும் மாணவி என்பதோடு, இவர் இலங்கைக்கு வருகைதரும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இவர் கனடாவின் டொராண்டோவிலிருந்து இந்த போதைப்பொருள் கப்பலை ஏற்றிக்கொண்டு அபுதாபிக்கு வந்திருந்தார். அங்கிருந்து, இரவு 8.35 மணிக்கு எதிஹாட் எயார்வேஸ் விமானம் EY-396 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவர் கொண்டு வந்த பயணப் பொதியில் 3 போர்வைகளில் சுற்றப்பட்ட 17 கிலோகிராம் 573 கிராம் ஹஷீஷ் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

குறித்த போதைப்பொருள் 175 மில்லியன் ரூபா பெறுமதியானதாகும்.

இளம் பெண்ணும் அவர் கொண்டு வந்த போதைப்பொருள் உள்ளிட்ட பொருட்கள் என்பன மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply