இஷார செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை – புத்திக மனதுங்க நம்பிக்கை!

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பிலான முக்கிய சந்தேக நபரான இஷார செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை என்று நம்பப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

இஷார செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக பரவி வரும் வதந்திகள் குறித்து கேள்வி எழுப்பிய வேலையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த கொலை சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குள் அவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான அனைத்து சாத்தியமான வழிகளும் அடையாளம் காணப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி அடைக்கப்பட்டன.

அத்தகைய சூழ்நிலையில் அவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.

புலனாய்வுக் குழுக்கள் தங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு தகவலையும் ஆராய்ந்து வருகின்றன.

இதுபோன்ற சம்பவம் நிகழும்போது ​​பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகின்றன. விசாரணைகளைத் திசைதிருப்ப குற்றவாளிகள் இதுபோன்ற தகவல்களை வெளியிடுவது சாத்தியமாகும்.

இந்நிலையில் சந்தேகநபரை கைது செய்ய புலனாய்வுக் குழுக்கள் இன்னும் தீவிரமாக செயற்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply