
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஹோமாகம அமைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மேல் மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான காமினி திலகசிறி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மஹரகம தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்குள் நிலவும் அமைதியின்மை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.