
2025 ஆம் ஆண்டுக்கான அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைளுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
அதற்கமைய, முதலாம் தவணைக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்ட பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் ஏப்ரல் 1ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.